திரு. இமயவரம்பன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
(M) +91 93613 93614
விழுப்புரம் மாவட்ட செய்திகள்!
...
வரலாறு
கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது.
பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது மற்றும் செப்டம்பர் 30, 1993 அன்று ஒரு தனி மாவட்டமாக மாறியது.
இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு கடலூர் மாவட்டத்தை ஒத்திருக்கிறது.
சோழர்கள் ஆரம்பகால ஆட்சியாளர்களாக இருந்தனர். இந்த ஆட்சியாளர்களிடையே கரிகால சோழர் மிகவும் புகழ்பெற்றவர்.
சிறிது காலம்,சிம்ம விஷ்ணு எனும் பல்லவ அரசரால் சோழர்கள் வெளியேற்றப்பட்டு, பல்லவ ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது.
விஜயாலய சோழர் மீண்டும் சோழ ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டினா். இது பெரிய சோழ சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாகும்.
பின்னர் சோழர் ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்ததினால், ஆட்சி அதிகாரத்தை கிழக்கு சாளுக்கியர்கள் கைப்பற்றினார்கள்.
அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251ஆம் ஆண்டு
தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50ஆண்டுகள்
பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி முகலாயர்களின் படையெடுப்பால் கி.பி.1334-1378 ஆண்டுகள் வரையிலும்
முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜய நகரப்பேரரசும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.
கி.பி.1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார்.
பின்னர் முகலாயப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு
தென்னாற்க்காடு மாவட்டமாக மதராசு மாகாணத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது.
கிழக்கிந்திய கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது.
தோற்றம்
இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் முப்பத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும் விழுப்புரம்.
மாவட்ட தலைமையகம் விழுப்புரத்தில் அமைந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து
விழுப்புரம் மாவட்டம் அமைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமாகும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னைக்கு நடுவே தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் அமைந்துள்ளது.
இது இரயில் பாதையால் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இது முக்கிய சந்திப்பாகும். தமிழ்நாட்டின் எந்த மூலையிலும்,
இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் செல்லலாம். மாவட்டத்தில் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன.
விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெருந்திட்ட வளாகத்தில் உள்ளன.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம் 11 38’25’N மற்றும் 12 20’44 “S: 78 15′ 00” W மற்றும் 79 42 ’55 “E இடையே 3725.54 சதுர கி.மீ பரப்பளவில்
அமைந்துள்ளது. இதன் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் கடலூர் மாவட்டமும், மேற்கு திசையில் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும்,
வடக்கு திசையில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
நிர்வாக அலகுகள்
தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 932 வருவாய் கிராமங்கள், 2 வருவாய் கோட்டங்கள், 9 தாலுகாக்கள், 13 வட்டாரங்கள், 8 பேரூராட்சிகள்,
693 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 நகராட்சிகள் ஆகியவை உள்ளன.
புவியியல் அமைப்பு
மாவட்டத்தின் பொது புவியியல் உருவாக்கம் எளியதாக தோற்றம் அளிக்கிறது. அதில் பெரும்பகுதி மெட்டாமார்பிக்
பாறைகளால் மூடப்பட்டுள்ளது. வெவ்வேறு புவியியல் காலத்திற்குச் சொந்தமான வண்டல் பாறைகள் மூன்று பெரிய குழுக்களாக உள்ளன.
பல மலைக்குன்றுகள் சூழ்ந்த இந்த மாவட்டத்தின் மிகவும் அழகிய பகுதி செஞ்சி மலையைப் சுற்றி உள்ளது.